புதியவை :

Grab the widget  Tech Dreams

27 மே 2010

பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பணம் பறிமுதல்


திருநெல்வேலி:நெல்லை, பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பத்திரவு பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பணம் புரள்வது குறித்து தகலறிந்த மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, எஸ்கால் ஆகியோர் சோதனை நடத்தியதில் அலுவலக கம்ப்யூட்டருக்கு அருகில் போட்டு வைத்திருந்த பணம், மற்றும் உள்ளே இருந்த புரோக்கர்கள் வைத்திருந்த பணம், கணக்கில் காட்டமுடியாத பணம் என மொத்தம் 11 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்ட்ரார் தாணுலிங்கம், உதவியார் மணி ஆகியோர் மீது கணக்கில் காட்ட முடியாத பணம் வைத்திருந்ததற்காக துறைவாரியான நடவடிக்கைக்கு வழக்கு தொடரப்படுவதாக, டி.எஸ்.பி.,தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக