புதியவை :

Grab the widget  Tech Dreams

30 மே 2010

தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல்,மீண்டும் கைது


கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த 11-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 24-ந்தேதி ஜாமீன் கோரி கரூர் கோர்ட்டில் சக்திவேல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சர்வமங்களா, லஞ்ச வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதாந்திர லாக்கப் விசிட்டிற்காக நீதிபதி சர்வமங்களா சென்றார். அங்கு ஆய்வு செய்தபோது தினசரி கையெழுத்து போட வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் 29ந்தேதி (நேற்று) ஸ்டேஷனில் கையெழுத்து போடாதது தெரிய வந்தது
இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேலின் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி சர்வமங்களா உத்தர விட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக