புதியவை :

Grab the widget  Tech Dreams

27 மே 2010

பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôர் சோதனை


நாகர்கோவில்,​​ மே 27:​ ​ பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.​

அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.​ 15,420 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.​ இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து,​​ அரசு உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.​ சுந்தரராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன்,​​ பீட்டர்பால்துரை,​​ தர்மராஜ் உள்பட போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.​ அப்போது கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ.​ 15,420 கண்டுபிடிக்கப்பட்டது.​ ​ ​ இது தொடர்பாக சார்பதிவாளர் நூர்ஜஹான் ​(48),​ இளநிலை உதவியாளர் ரேணுஜா ​(29),​ அலுவலக உதவியாளர் சந்திரபாபு ​(57),​ ஏஜெண்டுகள் நாகராஜன் ​(35),​ தம்புரான் ​(42),​ கண்ணன் ​(52) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக