
பழநி: பழநி சப் ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் போலீசார் இரண்டு மணிநேர சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பழநி தாலுகா அலுவலக வளாகத்தில் சப் ரிஜிஸ்தார் ஆபிஸ் உள்ளது. நேற்று மாலை 3.45 மணிக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், சத்தியசீலன் கொண்ட குழு சோதனையை துவக்கியது. மாலை 5.45 மணிக்கு சோதனையை முடித்தனர்.
டி.எஸ்.பி.,முருகேசன் கூறுகையில்,"கணக்கில் காட்டாமல் அலுவலக நோட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்தார் விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை,' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக