புதியவை :

Grab the widget  Tech Dreams

04 ஜூன் 2010

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கி கொலை செய்த மிருகம்


நாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.




கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

திசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
:
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட். பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து, தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான். பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள், "நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது' என, போனில் தகவல் கூறிவிட்டான்.

மூன்று மாதம் கழித்து வந்து, "எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்' என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம். அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.

ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், "கடவுள் காப்பாற்றுவார்' என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.

1 கருத்து:

  1. தவறு அந்த பெண்ணின் மீதும், அவனின் தாய் மீதும் கூட. பாம்பை அடிக்காமல் சகுனம் பார்த்துக் கொண்டிருந்ததால் கொத்தி விட்டது.

    பதிலளிநீக்கு