புதியவை :

Grab the widget  Tech Dreams

30 ஜனவரி 2010

லஞ்சம் கேட்டால் செல்போனில் (98409-83832) என்னிடம் புகார் செய்யலாம் : போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்




பொதுமக்களிடமகாவ‌ல்துறை‌யின‌ர் லஞ்சமகேட்டாலகடுமையாநடவடிக்கஎடுக்கப்படும் எ‌ன்று கூ‌‌றிய மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன், லஞ்சமகொடுத்தபாதிக்கப்பட்டவர்களஎனசெல்போனில் புகாரசெய்யலாம் எ‌ன்றா‌ர்.


சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கூறியதாவது: சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் வேட்டையில், போக்குவரத்து போலீசார் சிக்கியது குறித்த அறிக்கை, இன்னும் எனக்கு வரவில்லை. லஞ்சம் என்பது சமுதாயக் குற்றம். பொதுமக்கள் கொடுப்பதால் தான், போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். பிச்சைக்காரனிடம் பத்து முறை பணம் இல்லை எனத் தெரிவித்தால், அவன் மீண்டும் வரமாட்டான். அதேபோல, லஞ்சம் கேட்கும் போலீசாரிடமும் பணம் இல்லை எனக் கூறுங்கள்.

லஞ்சம் கொடுக்காவிட்டால், வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் கூறினால், எனது மொபைல் எண்ணில்(98409 83832) புகார் செய்யுங்கள்.

லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதிமீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து, கூடுதல் கமிஷனரிடம் பேசவுள்ளேன். எனவே, போலீஸ் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது உள்ள போலீசார் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.



1 கருத்து: