புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜனவரி 2010

தர்கா புனரமைக்க லஞ்சம் , வக்பு வாரிய அதிகாரி கைது


வேலூர் மாவட்டத்தில் தர்கா ஒன்றினை புனரமைக்க லஞ்சம் வாங்கிய வக்பு வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள தர்காவில் செயலாளராக இருப்பவர் குலாப்கான். தர்காவுக்கு சொந்தமான காலியிடத்தில் கழிப்பறை கட்டவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் ரூ.2 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்து அதற்கான அங்கீகாரத்துக்காக வக்பு வாரிய வேலூர் அலுவலக கண்காணிப்பாளர் பாபு நவாப்கானை அணுகினார்.

அங்கீகாரம் அளித்து பணிகளை தொடங்க அனுமதிக்க தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று நவாப்கான் கேட்டுள்ளார். ரூ.3 ஆயிரத்தை கடந்த 15&ம் தேதி குலாப்கான் கொடுத்துள்ளார். மீதி 2 ஆயிரத்தையும் தந்தால்தான் பணிக்கான அங்கீகாரம் தர முடியும் என்று நவாப்கான் கூறியுள்ளார்.

இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் குலாப்கான் புகார் செய்தார். அவர்களது அறிவுரைப்படி, குலாப்கான் நேற்று மாலை ரூ.2 ஆயிரத்தை வேலூர் காந்தி ரோடு வக்பு வாரிய அலுவலகத்தில் இருந்த பாபு நவாப்கானிடம் கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் பாபு நவாப்கானை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக