புதியவை :

Grab the widget  Tech Dreams

25 ஜனவரி 2010

சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய கிடாரிபட்டி வி.ஏ.ஓ., மலைச்சாமி கைது



திருமண உதவித் தொகை பெறுவதற்காக சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நேற்றிரவு மேலூரில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் கிடாரிபட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் சித்ரா. இவருக்கும் சென்னகரம்பட்டியை சேர்ந்த சேவுகப் பெருமாளுக்கும் ஜன. 27ல் மேலூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமமிர்த அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் பெற சித்ரா குடும்பத்தார் முடிவு செய்தனர்.

சித்ராவின் சகோதரர் செந்தில்குமார்(31) கிடாரிபட்டி வி.ஏ.ஓ., மலைச்சாமி(55)யிடம் வருமானச் சான்று, இருப்பிட சான்று, திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பம் ஆகியவற்றில் கையெழுத்து கேட்டுள்ளார். இதற்கு மலைச்சாமி 1500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.100 ரூபாயை முன்பணமாக கொடுத்த செந்தில்குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இன்று இரவு மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மீதி 1400 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிய வி.ஏ.ஓ., தனக்கு 900 ரூபாய் போதும் என்று கூறி, 500 ரூபாயை செந்தில் குமாரிடம் திருப்பி தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக