புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜனவரி 2010

லஞ்சம் வாங்கும் ஊழியருக்கு ஓய்வூதியம், சலுகை கிடைக்காது



லஞ்சம் வாங்கி தண்டிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் கிடைக்காது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்ச ஊழலை அடியோடு ஒழிக்க முதல்வர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் எடுத்துள்ள கொள்கை முடிவின்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த்சிங் அண்மையில் எல்லா அரசுத்துறை தலைவர்கள், வாரியங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "அரசு ஊழியர் லஞ்சம் அல்லது சட்ட விரோதமான பரிசுகளை பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டால் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்கீழ் வழக்கு தொடரப்படும். சம்பந்தப்பட்ட நபர் பணியில் இருக்கும்போது நீதிமன்றடால் பணியில் இருந்து நீக்கப்படுவார்.

இது மட்டுமின்றி அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதரச் சலுகைகளும் ரத்து செய்யப்படும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் ஓய்வு பெற்றப் பிறகு தண்டிக்கப்பட்டால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்படும்.’’

இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக