புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜனவரி 2010

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி : இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் ஐவர் சிக்கினர்


லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து எஸ்.ஐ.,க்கள் சிக்கினர். அவர்கள் முறைகேடாக வசூலித்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அபராதத் தொகை வசூலிப்பதாகவும், அபராதத் தொகை வசூலித்ததற்கு ரசீது வழங்காமலும் போக்குவரத்து போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாசுக்கரசு மற்றும் போலீசார் பல குழுக்களாக பிரிந்து நேற்றிரவு வடசென்னை, பூக்கடைபோக்குவரத்து பிரிவில் அதிரடி சோதனை நடத்தினர்.

பூக்கடை, சென்ட்ரல், பிராட்வே, ரத்தன் பஜார், ஈவ்னிங் பஜார் ஆகிய இடங்களில் இச்சோதனை நடந்தது. அப்போது போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக வசூலித்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் சிக்கியது.
பூக்கடை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணசாமி, ஸ்ரீதரன் பிள்ளை, அப்துல் மஜித், கொத்தாவல் சாவடி எஸ்.ஐ., ராமச்சந்திரன், வடசென்னை பறக்கும் படைப்பிரிவு எஸ்.ஐ., மூர்த்தி ஆகியோர் சிக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக