
சிவகங்கையில் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய உதவிதொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் சுப்பையா.
அதே ஒன்றியத்திற்க்குட்பட்ட கோணம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிபவர் செல்வமணி. இவரிடம் கடந்த ஆகஸ்ட்- டிசம்பர் மாதத்திற்கான 6வது ஊதியகுழு பரிந்துரைப்படி சம்பள பில்லை அளிப்பதற்காக சுப்பையா ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து செல்வமணி லஞ்சபணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக