புதியவை :

Grab the widget  Tech Dreams

25 ஜனவரி 2010

திண்டுக்கல் - கோட்டூர் வி.ஏ.ஓ , சுப்புராஜ் கைது




லஞ்ச பணத்தை விழுங்கிய விஏஓ : விரலை விட்டு எடுத்தது போலீஸ்



நிலக்கோட்டை: கலப்பு திருமண நிதியுதவிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ, லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும், பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்தார். ஆனால், போலீசார் அவரை விழுங்க விடாமல் பணத்தை எடுத்து, அவரை கைது செய்தனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் விஏஓவாக இருப்பவர் சுப்புராஜ். பொன்முனியாண்டியை மூன்று மாதங்களாக அலையவிட்ட சுப்புராஜ், ரூ.1000 லஞ்சம் கேட்டார். ரூ.700 தருவதாக பொன்முனியாண்டி கூறினார். பின்னர், பொன்முனியாண்டி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி நேற்று கோட்டூர் விஏஓ அலுவலகம் வந்த பொன்முனியாண்டி, ரசாயனம் தடவிய ரூ.700ஐ சுப்புராஜிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் மற்றும் போலீசார் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சுப்புராஜ் அதிர்ச்சியடைந்தார். திடீரென பணத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். சுதாரித்த போலீசார் அப்படியே அவர் வாயை அமுக்கி வாயில் இருந்த பணத்தை விரல் விட்டு எடுத்தனர். அதன் பிறகு சுப்புராஜை கைது செய்தனர்.

1 கருத்து: