
திருப்பூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் -2ல் நேற்று திடீரென கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் "ரெய்டு' நடத்தினர்; கணக்கில் வராத 7,050 ரூபாயை பறிமுதல் செய்து, மூன்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில், சார்பதிவாளர் அலுவலகம் -2 உள்ளது. இந்த அலுவலகத்துக்குள், கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஏழு போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து "ரெய்டு' நடத்தினர்.
அங்குள்ள, கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்தனர். கணக்கில் வராத 7,050 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அந்த அலுவலகத்தில் பணியில் இருந்த இளநிலை உதவியாளர், உதவியாளர், வாட்ச்மேன் மூவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக