புதியவை :

Grab the widget  Tech Dreams

25 ஜனவரி 2010

திருமணம் செய்யவும் லஞ்சம் , ஒரே நாளில் 4 பேர் பிடிபட்டனர்


திண்டுக்கல்லில் ரூ. 700 லஞ்சம் வாங்கிய வி..., கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே இருக்கும் கோட்டூரில் வி..., வாக இருப்பவர் சுப்புராஜ். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கலப்பு திருமணத்துக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்க ரூ. 700 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வி..., சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.

___________________________________________________________________


திருமண உதவித் தொகை பெறுவதற்காக சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் வாங்கிய வி..., நேற்றிரவு மேலூரில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் கிடாரிபட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் சித்ரா. இவருக்கும் சென்னகரம்பட்டியை சேர்ந்த சேவுகப் பெருமாளுக்கும் ஜன. 27ல் மேலூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமமிர்த அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் பெற சித்ரா குடும்பத்தார் முடிவு செய்தனர். சித்ராவின் சகோதரர் செந்தில்குமார்(31) கிடாரிபட்டி வி..., மலைச்சாமி(55)யிடம் வருமானச் சான்று, இருப்பிட சான்று, திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பம் ஆகியவற்றில் கையெழுத்து கேட்டுள்ளார். இதற்கு மலைச்சாமி 1500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.100 ரூபாயை முன்பணமாக கொடுத்த செந்தில்குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இன்று இரவு மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மீதி 1400 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிய வி..., தனக்கு 900 ரூபாய் போதும் என்று கூறி, 500 ரூபாயை செந்தில் குமாரிடம் திருப்பி தந்துள்ளார்

__________________________________________________________________________


மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் திருமண நிதி உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இரண்டு பெண் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. ராஜேஷ் திருமண நிதி உதவி கோரி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ரேவதியிடம் (57) விண்ணப்பித்தார். ரேவதி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பேரம் பேசி 1,000 ரூபாய் தர ராஜேஷ் சம்மதித்தார். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயனக் கலவை தடவிய 1,000 ரூபாயை, ரேவதியிடம் ராஜேஷ் கொடுத்தார். மறைந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர், ரேவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊர்நல அலுவலர் பழனியம்மாளை (52) கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம், கணக்கில் வராத 4,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக