புதியவை :

Grab the widget  Tech Dreams

19 ஜனவரி 2010

லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் கலெக்டரின் பி.ஏ, தாவூத் , எழுத்தர் மதியழகன் கைது.


தாவூத்


பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக மணிவேலு (56). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ‌பணியில் இருந்‌த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சென்றார். அந்த நேரம் கலெக்டரின் பி.ஏ., ரெய்டுக்கு வந்துள்ளார். மணிவேலு பணி நேரத்தில் அங்கு இல்லாததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி கலெக்டர் பி.ஏ., தாவூத்தை அணுகியுள்ளார். அப்போது தாவூத் லஞ்சமாக ரூ. 5000 கேட்டுள்ளார். மேலும் எழுத்தர் மதியழகனுக்கு ரூ.1000 லஞ்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிவேலு புகார் கொடுத்தார். இன்று மணிவேலு தாவூத்திடம் லஞ்சம் கொடுக்க சென்றார். அப்போது மறைந்திருந்த போலீசார் 2 அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக