புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஆகஸ்ட் 2009

பாண்டி முத்து - பொள்ளாச்சி கூட்டுறவு தனி அலுவலர் கைது.

பொள்ளாச்சி, ஆக. 28: பொள்ளாச்சியில் ரேஷன் கடை பணியாளர்களிடம் நிலுவைத் தொகை தருவதற்கு லஞ்சம் பெற்றதாக கூட்டுறவு சங்க தனி அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பொள்ளாச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் தனி அலுவலராக பணியாற்றுபவர் பாண்டி முத்து. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சரகங்களில் 39 ரேஷன் கடைகள் இவருக்கு கீழ் வருகின்றன. இவற்றில் பணியாற்றும் ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு ஏப். 28-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. நிலுவைத் தொகை முழுவதையும் லஞ்சமாக வழங்கினால் ஊதிய உயர்வுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிப்பதாக பாண்டிமுத்து ரேஷன் கடை ஊழியர்களிடம் தெரிவித்திருந்தார். அடுத்த மாதம் முதல் புதிய ஊதியம் அமலாகும் என்று பாண்டிமுத்து கூறியிருந்தார். இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரிடம் ரேஷன்கடை பணியாளர்கள் 4 பேர் தெரிவித்திருந்தனர். அதன்படி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள பாண்டிமுத்து வீட்டுக்கு 4 பேரும் சென்று ரூ.64 ஆயிரம் லஞ்சப் பணத்தை வெள்ளிக்கிழமை மாலையில் கொடுத்தனர். அங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் பாண்டிமுத்துவை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக