புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2009

ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் நடராஜன் கைது

திருவண்ணாமலை: செங்கம் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனச்சரகரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், வனச்சரகராக நடராஜன் பணிபுரிந்து வருகிறார்.

ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் காட்டுப்பகுதியில், சிமென்ட் தொட்டி கட்டும் பணியை 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், டெண்டர் எடுத்து சின்னக்கண்ணு என்பவர் பணி செய்து முடித்தார்.
கடந்த ஜூன் மாதம் அவர் இறந்துவிட்டார். அந்த பணத்தை பெற சின்னக்கண்ணு மகன் சண்முகம் வனச்சரகர் நடராஜனை அணுகினார். "15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், உடனடியாக டெண்டர் பணிக்கான பணத்தை கொடுப்பதாக' அவர் தெரிவித்தார். 10 ஆயிரம் ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து, சண்முகம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, 10 ஆயிரம் ரூபாயை சண்முகம் கொடுத்த போது, அதை வாங்கிய நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக