புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஆகஸ்ட் 2009

மின்வாரிய வணிக ஆய்வாளர் ராஜேந்திரன் அதிரடி கைது

சென்னை: "மூன்று பேஸ்' மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்வாரிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அப்பகுதியில், "யாதவா நியூஸ் மார்ட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் "சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு உள்ளது. "மூன்று பேஸ்' மின் இணைப்பு வேண்டி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு கட்டணமாக 12 ஆயிரத்து 75 ரூபாய் செலுத்தினார். மின்வாரிய வணிக ஆய்வாளர் (கமர்சியல் இன்ஸ்பெக்டர்) ராஜேந்திரன்(45), மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்டு, இணைப்பு வழங்காமல் தாமதம் செய்தார். மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவர் கேட்ட தொகையை தருவதாக சுப்பிரமணி கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், இமானுவேல் ஞானசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று மாலை சுப்பிரமணியின் கடைக்குச் சென்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், லஞ்சப் பணத்தை வாங்கினார்.
அருகேயிருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தார். பின்தொடர்ந்து சென்ற தனிப்படையினர், கமர்சியல் இன்ஸ்பெக்டரை கைது செய்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக