புதியவை :

Grab the widget  Tech Dreams

20 ஆகஸ்ட் 2009

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சம்பத்குமார் கைது

பூந்தமல்லி, ஆக. 20-
பூந்தமல்லி சென்னீர்குப்பத்தில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வணிக ஆய்வாளராக சம்பத்குமார் (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். பூந்தமல்லி எழில்நகரை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது வீட்டுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக வணிக ஆய்வாளர் சம்பத்குமாரை நாடினார்.
அவர் மின்சார இணைப்பு கொடுக்க ரூ. 11,500 லஞ்சம் வேண்டும். முதல் கட்டமாக ரூ. 3 ஆயிரம் தாருங்கள் என்று கேட்டார். இதுபற்றி சசிகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
சம்பவத்தன்று சசிகுமார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 3 ஆயிரம் பணத்தை வணிக ஆய்வாளர் சம்பத்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார், அதிகாரி சம்பத்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக