புதியவை :

Grab the widget  Tech Dreams

13 ஆகஸ்ட் 2009

போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்


திருச்சி:வழக்கு பதியாமல் இருக்க, அரிசி ஆலை அதிபரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.திருச்சி விமான நிலைய பகுதியில் வசிப்பவர் செல்லையா(57); அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த மில்லில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனி, அவரது மனைவி ரம்யா வேலை செய்வதாகக் கூறி, முன்பணமாக 17 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தனர்.ஆனால், வேலைக்கு வராததோடு, பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த 6ம் தேதி வீட்டை காலி செய்து விட்டு ரம்யா திண்டுக்கல்லுக்கு புறப்பட தயாரானார். தகவலறிந்து அங்கு சென்ற செல்லையா, ரம்யாவைத் தாக்கினார். இதுகுறித்து விமானநிலைய போலீசில் ரம்யா புகார் அளித்தார்.இந்த புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் தரவேண்டுமென, செல்லையாவிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் கேட்டார்.இதுகுறித்து செல்லையா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அவர்கள் அறிவுரைப்படி, நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் 5,000 ரூபாய் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடித்தனர்.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக