புதியவை :

Grab the widget  Tech Dreams

05 ஆகஸ்ட் 2009

வனத்துறை லஞ்ச அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: லஞ்சம் பெற்ற குற்றச் சாட் டில் கைது செய்யப்பட்ட வனத்துறை அதிகாரி ராஜலிங்க ராஜா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். சென்னையில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் இருந்தவர் ராஜலிங்க ராஜா

கேரளாவில் இருந்து கொண்டு வரப் பட்ட செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்ல, வியாபாரி ஒருவர் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி வழங்க, கடந்த மாதம் 15ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ராஜலிங்க ராஜா கைது செய்யப்பட்டார். அவர் ரிமாண்ட் செய்யப் பட்டு, போலீஸ் காவலில் உள்ளார்.
அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில், "உதவி வனப் பாதுகாவலர் ராஜலிங்க ராஜா ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் 15ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வெளியிடும் வரை அவருக்கு விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். அவர் முன் அனுமதி இன்றி சென்னையை விட்டு செல்லக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக