புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஆகஸ்ட் 2009

தூத்துக்குடி மாவட்டசமூக நலத்துறையில் லஞ்சம்-3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி, ஆக. 27: தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் வந்ததையடுத்து, இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக