புதியவை :

Grab the widget  Tech Dreams

23 ஜூலை 2009

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இமிகிரேசன் அதிகாரி சேகருக்கு பல கோடி ரூபாய் சொத்து !


இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இமிகிரேசன் அதிகாரி சேகருக்கு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் வசித்து வரும் இமிகிரேசன் அதிகாரியை, லஞ்சம் வாங்கிய வழக்கில் சி.பி.ஐ., போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கோர்ட் அனுமதித்தது.கைதான இமிகிரேசன் அதிகாரி சேகர், அவரது பினாமியாக செயல்பட்ட அன்வர் உசேன், அறக்கட்டளை நடத்தி வரும் ரவீந்திரபாபு ஆகியோரிடம் சி.பி.ஐ., தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேற்கு அண்ணா நகரில், சக்ரா நீச்சல் குளம் அருகே அன்வர் உசேன் வீடு உள்ளது. கோடம்பாக்கத்தில் "கிளாசிங் டவர்ஸ் அன்ட் டிராவல்ஸ்' என்ற பெயரில் அலுவலகம் உள்ளது. இந்த இரு இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ.,க்கு கிடைத்தன.


அன்வர் உசேனை போல இஸ்மாயில் (35) என்ற புரோக்கர் உட்பட 12 டிராவல்ஸ் ஏஜென்ட்கள், சி.பி.ஐ., போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள், ரயில்வே, வணிகவரித்துறை, சுங்க வரித்துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளின் "கேம்ப் கிளர்க்குகளை' கையில் வைத்துள்ளனர். போலி ஆவணங்களை தாக்கல் செய்து பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.சேகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட புதிய சுவிப்ட் கார், புரோக்கர் அன்வர் உசேனின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற இடங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகள் உள்ள விவரத்தை சி.பி.ஐ., போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.அந்த சொத்துகளை மாத சம்பளத்தில் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவை அனைத்தையும் லஞ்ச பணத்தில் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, கோர்ட் உத்தரவு பெற்று முடக்கும் நடவடிக்கையில் சி.பி.ஐ., இறங்கியுள்ளது.

தேர்தல் முடிவுபோன்ற தகவல்: இமிகிரேசன் அதிகாரி சேகரை சி.பி.ஐ., தனிப்படை யினர் கைது செய்தவுடன், அவரது பினாமியாக செயல்பட்ட புரோக்கர் அன்வர் உசேன் வீடு, அலுவலகம், வங்கி லாக்கரில் சோதனை நடத்தினர். வீட்டில் சில லட்சம் ரூபாய் சிக்கியது. தேர்தல் முடிவுகள் போல, நேரம் செல்லச் செல்ல, 50 லட்சம், ஒரு கோடி, ஒன்றரை கோடி, இரண்டு கோடி என தொகையின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருந்தது. கடைசியில் இரண்டு கோடியே 2 லட்சம் ரூபாய் என முடிவுக்கு வந்தது.

நன்றி :தினமலர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக