புதியவை :

Grab the widget  Tech Dreams

30 ஜூலை 2009

வீட்டு வரி வசூலிக்க ரூ. 3,000 லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது

சென்னை: ஆட்டோ டிரைவரிடம் வீட்டு வரி வசூலிக்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி, "பில் கலெக்டர்' கைது செய்யப்பட்டார்.சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பகுதியில் வசித்துவரும் ஆட்டோ டிரைவர் சங்கர். இவரது மைத்துனர் சீனிவாசன், பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீடு, பெரம்பூர் சுப்ரமணியபாரதி தெருவில் உள்ளது.மைத்துனரின் வீட்டிற்கு சொத்து வரி செலுத்த, பெரம்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சங்கர் சென்றார். மூன்றாவது மண்டலம் 34வது வார்டு சொத்து வரி அலுவலக, "பில் கலெக்டர்' இமானுவேல் தேவபிரசாத்தை (40) அணுகினார்."உங்கள் மைத்துனரின் வீட்டிற்கு சொத்து வரி குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் வரி செலுத்த வேண்டும். குறைவாக வரி ரசீது போட்டுத்தர 3,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,கள் நடராஜன், திருநாவுக்கரசு ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் புகார் கொடுத்தார். ரசாயன கலவை தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரவரதன், குமரகுருபரன், அமல்ராஜ், லட்சுமிகாந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. லஞ்ச பணத்தை வாங்கிய "பில் கலெக்டர்' இமானுவேல் தேவபிரசாத்தை கைது செய்தனர்.சாதாரண உடையில் இருந்த விஜிலென்ஸ் போலீசாரை திசை திருப்ப, "என்னை யாரோ கொலை செய்ய வந்துள்ளனர்' என சத்தம் போட்டு பொதுமக்களை கூட்டினார். "நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கைது செய்துள்ளோம்' என பொதுமக்களிடம் விஜிலென்ஸ் போலீசார் கூறினர்.அங்கு கூடியிருந்த ஒருவர், "இந்த நபரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்த மருந்துக் கடை உரிமையாளர், வேலை முடியாததால் பல மாதங்களாக அலைந்துகொண்டிருக்கிறார். அலுவலகத்திற்கு எதிரேயுள்ள வீட்டுக்காரரிடமே 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கியவர் இவர்' என விஜிலென்ஸ் போலீசாரிடம் கூறினர். ஆறு மாதத்திற்கு வீட்டு வரி 122 ரூபாய். அதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக