புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜூலை 2009

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கணவருடன் கைது; உதவியாக இருந்த மேலும் 2 பேரும் சிக்கினர்

துறையூர் அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு மின் இணைப்பு கேட்டு உப்பிலியபுரம் உதவி மின் என்ஜினீயர் அலுவலகத்துக்கு செல்வராஜ் சென்றார். அங்கு இருந்த உதவி மின் என்ஜினீயர் ஜெயஸ்ரீ மின் இணைப்பு கொடுக்க தனக்கு ரூ.1500 லஞ்சம் வேண்டும் என்று கேட்டார். உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதி மற்றும் போலீசார் திட்டப்படி ரசாயனபொடி தடவப்பட்ட பணத்தை இன்று காலை ஜெயஸ்ரீயிடம் செல்வராஜ் கொடுத்தார். அவர் துப்புரவு ஊழியர் கமலத்தை பணத்தை வாங்கி தனது கணவர் வக்கீல் பாண்டியனிடம் கொடுக்க சொன்னார். உதவி ஆய்வாளர் வெங்கடேசன் லஞ்ச பணம் ரூ.500ஐ பெற்றுக்கொண்டார்.
உடனே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் அதிகாரி ஜெயஸ்ரீ, அவரது கணவர் வக்கீல் பாண்டியன், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், துப்புரவு ஊழியர் கமலம் ஆகிய 4 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் பிடிபட்டவர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக