புதியவை :

Grab the widget  Tech Dreams

23 ஜூலை 2009

கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ்

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த ஓராண்டில், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 33 பேர், லஞ்ச வழக்கில் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். ஒரு புறம், லஞ்ச ஒழிப்பு வேட்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அசராத அரசுத் துறையினர், "இப்ப என்ன செய்வீங்க?' என்று லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு சவால் விடும் விதத்தில் ஊழலை தொடர்கின்றனர். அரசுத் துறைகளில் ஆழமாக வேர்விட்டு அடர்ந்து படர்ந்திருக்கும் லஞ்ச லாவண்யத்தை ஒடுக்க, அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு. எனினும், "இதற் கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என்பதை போல, அரசுத் துறை அலுவலர்கள், ஊழியர்களில் சிலர் அடாவடி வசூலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய, திருட்டுப்போன பொருட்களை மீட்டுத்தர, வழக்கிலிருந்து விடுவிக்க, என பல வகைகளிலும் லஞ்சம் பெறப்படுகிறது. அதே போன்று, மின்வாரியத்தில் மின் இணைப்பு கொடுக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி வழங்க மற்றும் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்கவும், வணிக வரித்துறை சோதனைச் சாவடிகளில் வரி ஏய்ப்பு செய்யவும், வருவாய்த் துறையில் சான்றிதழ்களை வழங்கவும் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதி தீவிர நடவடிக்கை, அலுவலர்களின் லஞ்சம் வாங்கும் முறையை ரகசியமாக மாற்றியிருக்கிறதே தவிர, முற்றாக ஒழித்துவிடவில்லை. காரணம், லஞ்சம் கொடுத்தாவது தமது காரியத்தை விரைந்து முடித்து விட வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடமும் மேலோங்கியிருக்கிறது. இது, அரசுத் துறையில் லஞ்ச, லாவண்ய முறைகேடுகளை ஒழிக்க, பெரும் தடையாக உள்ளது. கடந்த 2008 ஜூலை முதல் நேற்று வரை, கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் 23 வழக்குகளில், 33 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில், அவினாசி தாலுகா தாசில்தார் பாலசுப்ரமணியம், கோம் பக்காடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக இளநிலை பொறியாளர் செந்தில்முருகன், கணபதி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், துடியலூர் போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன், பெ.நா.பாளையம் வேளாண் வங்கி செயலாளர் வேலுசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; மற்றவர்கள் ஊழியர்கள். இவர்களிடம் இருந்து 2.20 லட்ச ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது நடவடிக்கை தவிர, அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் மேற்கொள் ளப்பட்டது. கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இரு அலுவலகங்கள், பதிவுத்துறையின் ஐந்து அலுவலகங்கள், கோவை நகரமைப்பு அலுவலகம், போக்குவரத் துறையின் ஐந்து அலுவலகங்கள், வணிகத்துறை அலுவலகம், பல்லடம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, திருப் பூர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.தவிர, கோவை மற்றும் மேட்டுப் பாளையத்திலுள்ள போக்குவரத்து துறையின் நான்கு செக்போஸ்ட்கள், கோவை தொழிலாளர் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 5.89 லட்ச ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 12 அரசுத் துறைகள் மற்றும் 23 செக்போஸ்ட்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.குறையவில்லை லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத் துறையினரின் தொடர் கைது மற்றும் சோதனை நடவடிக் கையை மீறி போலீஸ், அரசுத் துறைகளில் லஞ்ச முறைகேடு தொடர்கிறது. "நேரடியாக லஞ்சம் வாங்கினால் பிடிபட்டு விடுவோம்' என்ற முன்னெச்சரிக்கையுடன் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் "ஏஜன்ட்'களை நியமித்துள்ளனர். சமீபத்தில், கோவையில் மருந்து ஆய்வாளர் கைது செய் யப்பட்ட போது இத்தகவல் அம்பலமானது. தொடர்ந்து, லஞ்சம் வசூலிக் கும் ஏஜன்டாக செயல்பட்ட, காந்திபுரத்திலுள்ள மருந்துக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். இதே முறையை, போலீஸ், போக் குவரத்து துறை, வணிகவரித் துறை, மின் வாரியம், பதிவுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சில அதிகாரிகளும் பின் பற்றி வருவதாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத் துள்ளது. ஏஜன்ட்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, கோவை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியதாவது:அரசுத் துறைகளில் லஞ்சம் கேட் கும் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம். லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடம் முழு அளவில் ஏற்பட்டால் மட்டுமே, அரசுத் துறைகள் சுபிட்சம் பெறும். இல்லாவிடில், நாங்கள் ஒரு புறம் நடவடிக்கை எடுத்துக் கொண் டிருக்க, மறுபுறம் லஞ்ச லாவண்ய நடவடிக்கைகள் தொடரவே செய் யும். லஞ்ச பேர்வழிகள் மீதான சட்டப்படியான நடவடிக்கை மற்றும் ஆலோசனைக்கு கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டிலுள்ள மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தை 0422 - 2238 647 என்ற எண்ணில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி :தினமலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக