புதியவை :

Grab the widget  Tech Dreams

23 ஜூலை 2009

மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் மின் வாரிய ஊழியர் கைது

மின் இணைப்பு கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அயனாவரம் மின் வாரிய ஊழியர் பழனிகுமார்(41) என்பவரை அணுகினார். அப்போது, அவர் மின் இணைப்பு கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து ராஜன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயனம் தடவிய நோட்டுகளை ராஜனிடம் கொடுத்தனர். அப்பணத்தை ராஜன் மின் வாரிய ஊழியர் பழனிகுமாரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த தனிப்படையினர் அவரை கையும், களவுமாகப் பிடித்தனர்.


நன்றி :தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக