புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜூலை 2009

கொலையாளியிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய கரூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கரூரை அடுத்த வேலாயுதம் பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றியவர் கருணாகரன் (வயது 48). இவர் சமீபத்தில்தான் குளித்தலையில் இருந்து இடமாறுதல் ஆகி வேலா யுதம் பாளையத்தில் பொறுப் பேற்றார்.
இந்நிலையில் இன்ஸ் பெக்டர் கருணாகரன், குன்னம் சத்திரம் நடுபாளை யத்தில் விவசாயி பெரிய சாமி கொலை செய்யப் பட்ட வழக்கில் முதல் குற்றவாளியிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிவிட்டு அவரை தப்ப விட்டதாக கூறப்பட்டது.
மேலும் மற்றொரு சாலை விபத்தில் சண்முகம் என்பவர் பலியானதில் விபத்தை ஏற்படுத்தியவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தப்பவிட்டதாக கூறப்பட்டது.
இந்த 2 புகாரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினகரனுக்கு தெரிய வந்தது. அவர் உடனே இதுபற்றி விசாரணை நடத்தினார். அதில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் லஞ்சம் பெற்று குற்றவாளியை தப்பவிட்டது உறுதியானது.
இதனையடுத்து அவரை சஸ்பெண்டு செய்ய போலீஸ் சூப்பிரண்டு தினகரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. ராம சுப்பிரமணியனுக்கு பரிந்துரை செய்தார்.
டி.ஐ.ஜி. ராமசுப்பிர மணியன், இன்ஸ்பெக்டர் கருணாகரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை கரூர் மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக