புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜூலை 2009

விவசாயத்துக்கு இலவச மின்சாரம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது

கருமத்தம்பட்டி, ஜூலை. 28-
கோவையை அடுத்த கருத்தம்பட்டி அருகேயுள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலசுந்தரம் (வயது 29). இவர் தனது தோட்டத்துக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரியத்திடம் விண்ணப்பித்தார்.
அப்போது மின் வாரிய அதிகாரிகள் வரைபடம், கந்தாய ரசீது ஆகியவற்றை கேட்டனர். அவற்றை பெறுவதற்காக கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பூபதி¢யை பாலசுந்தரம் சந்தித்தார். இலவச மின்சாரம் பெறு வதற்கு உரிய சான்றிதழ் களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு அதிகாரி பூபதி ரூ. 10 ஆயிரம் தந்தால் தான் சான்றிதழ் தர முடியும் என்றார். அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. 7 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று பாலசுந்தரம் கூறினார். சம்மதம் தெரிவித்த அதி காரி ரூ. 2 ஆயிரத்தை முன் பணமாக பெற்றுக் கொண்டார்.
கிராம அதிகாரி லஞ்சம் கேட்பது குறித்து கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் பாலசுந்தரம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூ. 5 ஆயி ரத்தை கிராம அதிகாரி பூபதியிடம் பாலசுந்தரம் இன்று கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ் பெக்டர்கள் உன்னி கிருஷ் ணன், கருணாகரன், ஞான சேகரன் ஆகியோர் கிராம அதிகாரியை கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக