புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜூலை 2009

பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம்; கிராம நிர்வாக அதிகாரி கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்னங் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நிலப்பட்டா மாற்றம் செய்ய, அனந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை அணுகினார். இதற்காக ரூ.2ஆயிரத்து500 லஞ்சம் தருமாறு ஜெகநாதன் கேட்டார். இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சாருக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்தார்.
பின்னர் நேற்று மணி கண்டன் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ ஜெகநாதனிடம் கொடுத்தார். அதை ஜெகநாதன் வாங்கிய போது லஞ்ச ஒழி¢ப்பு போலீசார் விரைந்து வந்து ஜெகநாதனை கைது செய்தனர். அவர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக