புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜூலை 2009

லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற ஆய்வாளர்: தடுத்த கான்ஸ்டபிள் விரலிலும் விழுந்தது 'கடி'

ஊட்டி: கூலி தொழிலாளியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நகராட்சி ஆய்வாளரை, ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்; லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த போது தடுத்த கான்ஸ்டபிள் விரலையும் ஆய்வாளர் கடித்தார். ஊட்டி பழைய மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்; கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். அரசு சார்பில் கண்ணனுக்கு கடந்த பிப்ரவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு வரி கட்ட வேண்டி, கடந்த மே 25ம் தேதி ஊட்டி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். வீட்டுக்கு ஆண்டு வரி 310 ரூபாய் என்றும், வரி விதிக்க தனக்கு லஞ்சமாக 1200 ரூபாய் தர வேண்டும் என வருவாய் ஆய்வாளர் விஸ்வநாதன்(47) கண்ணனிடம் கேட்டுள்ளார்.அப்போது கண்ணன், "தான் "டைபாய்டு' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கூலி வேலை செய்து வருவதாலும் லஞ்சம் தர முடியாது,' என தெரிவித்துள்ளார். இந்நிலையில், "லஞ்சம் கொடுத்தால் தான் வீட்டுக்கு வரி விதிக்க முடியும்,' என கூறி 200 ரூபாய் தள்ளுபடி கொடுத்து 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக