புதியவை :

Grab the widget  Tech Dreams

23 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது


சென்னை புழல் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ., முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பானுரேகா(45). இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவரிடம் அங்குள்ள அலுவலர் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்த பானுரேகா, முறையான ஆவணங்கள் மூலம் உரிய அதிகாரிகளிடம் கட்டட அனுமதிக்கு முயற்சித்தார். இந்நிலையில், இறுதிக்கட்ட ஒப்புதல் பணிக்காக அவரது மனு, அந்த அலுவலகத்தின் பிளான் அப்ரூவல் பிரிவுக்கு சென்றது. அங்குள்ள எழுத்தரின் உதவியாளர் கார்த்திகேயன்(52) என்பவர், பிளான் அப்ரூவல் கிடைக்க 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என்று கறாராக நிபந்தனை விதித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பானுரேகா, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., வலசராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கிருஷ்ணன் மற்றும் போலீசார், நேற்று காலை புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக